கிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

247 0
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் வயது 34 என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடும்ப பிணக்கு காரணமாகவே  குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலீஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின் தெரிவித்துள்ளனர்.