கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 28-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில்

263 0
கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை பேசி அவமானப் படுத்தி வருவாதகவும் தொடர்ந்தும் பழிவாங்கும் நோக்கோடு நடந்துகொள்வதாகவும் பழிவாங்கும் நோக்கோடு பணியாளர் ஒருவரை  பணியில் இருந்து  நிறுத்தியுள்ளார் என்றும். சாதியை சொல்லி பேசிய செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து இன்று  காலை  முதல்  பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த மாதமும்  தாங்கள் பணி பகிஸ்கரிப்பு செய்த போது கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் சமூகம் தந்து உரிய விசாரணையை மேற்கொண்டு தீர்வை பெற்றுத்தருவதாவும் குறிப்பிட்ட அவர்  விசாரணைக் குழுவை அமைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை இந்தக் காலப்பகுதியில் பிரதேச சபை செயலாளர் தொடர்ந்தும் பழிவாங்கும் வகையில் நடந்துகொள்வதாகவும்  பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுளளவர்கள் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதனிடம் வினவிய போது
பணியாளர் ஒருவர் உரிய முன்னறிவித்தல் இன்றி விடுமுறை எடுத்தமையினால் அவர் திணைக்கள் நடமுறைகளுக்கு அமைவாக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தவிர இரண்டு வேலை வெளிக்கள தொழிலாளிகள்தான் ஏனைய பணியாளர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்தனார்
தான் தன்னுடைய வாழ்நாளில் எச் சந்தர்ப்பத்திலும்  சாதியின் பெயர்களை உச்சரித்தது கிடையர்து அத்தோடு தூசன வார்த்தைகளையும் பேசியது கிடையர்து இது பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக கூறும் காரணங்கள் எனவும் தெரிவித்தார்
இதேவேளை இன்றைய தினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட பணியாளர்களை சந்தித்த உள்ளுராட்சி     உதவிஆணையாளர் பிரபாகரன் தான் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளாருடன் பேசி தீர்வை பெற்றுத்தருவதாகவும் எனவே பணி பகிஸ்கரிப்பை கைவிடுமாறும் கோரிய போதும் அதனை பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.