காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

228 0

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா 4 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உந்துருளியில் கஞ்சாவை கொண்டு சென்றுள்ள போதே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பளை பிரதேசத்தை சேர்ந்தவருடன், அவர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.