கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்…..(காணொளி)

274 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலயம் ஏ-9 பிரதான வீதியை மறித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 67ஆவது நாளாக தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.