அக்கரபத்தனையில் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ (காணொளி)

279 0

 

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இன்றைய தினம் நுவரெலியா இரானுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார், இரானுவம், பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீ காரணமாக இலங்கைக்கே உரித்தான அரிய வகை மூலிகைகள், பெறுமதிமிக்க மரங்கள், உட்பட ஊர்ந்து செல்லும் பிராணிகள் முயல், மான் போன்ற மிருகங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

https://youtu.be/_vRf7uM_f4Y