வீதியை மறியல் போராட்டம்; குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

255 0

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நிலமைகளை அவதானித்ததுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.

அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக வீதிப்போராட்டம் கைவிடப்பட்டதுடன், சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் சில கேள்விகளை எழுப்பினர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்பாடு மந்தமாக இருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை கண்டுகொள்வதில்லை என குற்றஞ்சாட்டினர். அத்துடன் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்த 56 பொது அமைப்புக்களின் ஒரு பிரதிநிதிகள் கூட இன்று உண்ணாவிரதிகளின் மேடைக்கு சமூகமளித்திருக்கவில்லையென தெரிவித்தனர். ஒரு சிலர் 63 நாட்களாகியும் நீங்கள் இன்னும் சாகவில்லையா? என கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தனர்