கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு தற்போது நடைபெறுகிறது

270 0

முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு இன்று இடம்பெற்றுவருகிறது

முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை விடுவதற்குரிய இடம் (பாடுகள்) கரைதுரைப்பற்று பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசம் தமது பயன்பாட்டிற்குரிய பிரதேசதம் என தெரிவித்து நீரியல்வளத்திணைக்களத்தால் கடந்த வருடம் ஜுலை மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட நிலையில்,  வழக்கு இன்றையதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.