நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழித்து வருகின்றது-ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி)

425 0

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், தியாக தீபம் அன்னை பூபதியின் 29 வது வருட நினைவு நிகழ்வை, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபானை, கல்குடாவில் அமைக்கப்படவுள்ள மதுபான தொழில்சாலை, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கான தமிழ் மக்களின் ஆதரவு தொடர்பாக, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களினால் பதில் அளிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீன்திரா வேந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.