காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது- எம்.ஏ.சுமந்திரன்;(காணொளி)

258 0

காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் தொடர்பாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.