மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

234 0

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் பொது அமைப்புக்கள் கலந்து கொண்டு மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான ஆய்வில் மருதங்கேணி பிரதேசத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் மூலம் மருதங்கேணி பிரதேசத்தின் மீன்பிடி முறையில் பாதிப்பு ஏற்படும் என உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் மருதங்கேணி பிரதேச கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர், வடமராட்சி மீனவசங்க பொது அமைப்புக்கள், வடமராட்சி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.