தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பித்த சைக்கிள் சாதனைப் பயணம் நேற்று புத்தளத்தை சென்றடைந்தது(காணொளி)

384 0

இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு இன, மத, மொழி பாகுபாடின்றி ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டதை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இவரின் சைக்கிள் சாதனைப் பயணம் நேற்று இரவு புத்தளத்தை சென்றடைந்திருந்த நிலையில், புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் இன்று தனது பயணத்தை கொழும்பு நோக்கி முன்னெடுத்தார்.

இதன் போது புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் தனது பயணத்தை முன்னெடுத்த தர்மலிங்கம் பிரதாபனுக்கு அங்கு கூடிய மக்கள் வாழ்த்துக்களை கூறி வழி அனுப்பி வைத்ததை காணமுடிந்தது.