மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பலகாரச்சந்தை விற்பனை (காணொளி)

346 0

பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயப்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பலகாரச்சந்தை விற்பனை இன்று இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஒழுங்கமைப்பில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய உணவு கலாசாரத்தையும் மக்களின் சுகாதாரத்துடனான   போஷாக்கையும், பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்குடன் சித்திரைப்  புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த பலகாரச் சந்தை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.யதீஸ்குமார், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.தில்லைநாதன்  மற்றும் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.