இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு எல்லா மனிதருக்கும் புதுவாழ்வை வழங்கட்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

249 0
பாவத்தில் கிடந்து அவதியுற்ற இந்த உலகத்தை, உலகத்தின் சகலரையும் மீட்டு விடுதலை கொடுக்க தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவை இந்த உலகிற்கு அனுப்பி அவருடய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலால் நம்மனைவருக்கும் பாவத்தில் நின்று முழு விடுதலை தந்தார். அவ்வாறான இந்த உயிர்தெழுதலின் நாளில் எல்லா மனிதருக்கும் விடுதலையும் சந்தோஷமும் நிறைவாக கிடைக்கவேண்டுமென்று பிரார்த்திப்பதோடு.
நாட்டிலே அன்பும் சமாதானமும் நிலை பெறவும் உயிர்த்த ஜேசுவின் ஆசிகள் கிடைக்கவும், உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஜேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடி மகிழும் இவ்வேளையில் அனைவர் மனங்களிலும் அன்பும் சமாதானமும் நிறைந்து மகிழ்ச்சியாக இவ்விழாவை கொண்டாட அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் எனது உயிர்ப்பு விழா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.என்றும் உங்கள் பா.டெனிஸ்வரன்.
அமைச்சர் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சு, வடக்கு மாகாணம்.