அமைச்சரவைக்கு தெளிவுபடுத்த உள்ளார் அமைச்சர் பைஸர் முஸ்தபா

289 0

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அமைச்சரவைக்கு தெளிவுபடுத்த உள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தரைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தச் சவால் வந்தாலும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்படும்.

தேர்தல் ஆணைக்குழுவே தேர்தல் தினத்தை நிர்ணயிக்கும்.

அதற்கு முன்னர் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன.

அந்த திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.