முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

229 0

கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு கடற்படையினரால் முள்ளிக்குளம் கிராம மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பத்து வருடங்களை எட்டியுள்ள நிலையில், இன்றுவரை தமது கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதப் பதிலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், தமது கிராமத்திலுள்ள கடற்படையினரை வெளியேற்றி தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி இன்றைய தினம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.