இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை- கனடா மனித உரிமை ஆணையம்(காணொளி)

254 0

இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை என, கனடா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துரைத்துள்ள கனடா மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் பிரதிநிதி,

–மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது கூட்டத் தொடரில் ஆணையாளர் செயிட் அல் ஹ_சைன் கொண்டுவந்துள்ள அறிக்கையினை வரவேற்கிறோம். அதற்கான ஆதரவினை கனடா வழங்கும்.

ஆனாலும், ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரிவர நிறைவேற்றவில்லை.

இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு விடயங்கள் இன்னும் மீதம் இருக்கின்றன. அவற்றில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதோடு, குறித்த காலத்திற்குள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.