முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக… (காணொளி)

267 0

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இன்றும் தொடர்கின்றது.

தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தகவலறியும் உரிமை சட்டத்தினூடாக தங்களது பிள்ளைகள் தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ள இன்றையதினத்தில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இன்றும், நாளையும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணிக்கு அரச அதிபரிடம் கையளித்து தங்களுடைய பிள்ளைகள் தொடர்பான தகவலை வழங்குமாறு கோரவுள்ளனர்.

இந்நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் இன்றைய தினம் தமது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவருகின்றனர்.