இரட்டை இலை முடக்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ்

259 0

இரட்டை இலை சின்னம் முடக்கம் பற்றி எங்களுக்கு கவலையும், அவசியமும் இல்லை என தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் முக்கிய பிரமுகர்கள், பொது நல அமைப்புகள், சங்கங்களை அணுகி ஆதரவு திரட்டிவருகிறார்.

அவருக்கு காசிமேடு மகளிர் கூட்டமைப்பு, சலவை தொழிலாளர் சங்கம், கேரள சமாஜம் ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து ஆதரவு கொடுத்தனர்.

தேர்தல் பணியில் சுணக்கமின்றி செயல்படும் வகையில் ஒவ்வொரு வட்டத்திலும் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தி வருகின்றன.

நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் மருதுகணேஷ் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். அவரிடம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, அதைப் பற்றி எங்களுக்கு கவலையும், அவசியமும் இல்லை. நாங்கள் தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம் வெற்றியை நோக்கி செல்கிறோம் என்றார்.

தி.மு.க. வேட்பாளர் செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தலைமை தேர்தல் பணி மனையில் நடக்கிறது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் துரைமுருகன் கலந்து கொண்டு தேர்தல் பற்றி பேசுகிறார்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.