தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை-சாள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

255 0

தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு 18 மாத கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  நேற்று காலை பார்வையிட்டார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லையென அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்….