தமிழக மீனவர்களின் படகுகளை விடுக்க நடவடிக்கை – சுஷ்மா

243 0

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழக மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று அவரை சந்தித்தது.

இதன்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன், பரிமுதல் செய்யப்படுகின்ற மீனவ படகுகள் விடுவிக்கப்படாதுள்ளமை போன்ற விடயங்கள் குறித்து தமிழக பிரதிநிதிகள் சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டனர்.

இந்த நிலையில், இலங்கையிடம் இருந்து படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சுஷ்மா சுவராஜ் உறுதியளித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஆழ்கடல் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 1500 கோடி இந்திய ரூபாய்களை ஒதுக்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக சுஸ்மா சுவராஜ் கூறியுள்ளார்.