கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டொரு தினத்தில் பதில் – நாடாளுமன்றில் தெரிவித்தார் சுவாமிநாதன்

227 0

கேப்பாபுலவு காணி விடயத்தில் எதிர்வரும் இரண்டொரு தினங்களில் உரிய பதில் கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் உள்ள தங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு கோரி மூன்று வாரங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்இ நேற்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நியாயமான கோரிக்கைக்கு பதில் வழங்க வேண்டும் என்று அவர் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் கோரினார்.

இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை உரியத் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்இ இதன்படி எதிர்வரும் ஓரிரு தினங்களில் கிரமமான பதில் ஒன்று வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்தார்.