சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது

449 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேரை நேற்று இரவு 10.30 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் யாழ் நீரியல் வளத்திணைக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் இராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் இரண்டு படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த நபர்களை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.