யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுகின்றது- விஜயகலா மகேஸ்வரன் (காணொளி)

350 0

யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அதிகளவில் பட்டம் பெற்று வெளியேறிய பெண்கள் உட்பட பட்டதாரிகள் வீதியில் நிற்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.