ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

241 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக, ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், ஜெனீவாவிலிருந்து இலங்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு மிக நெருங்கிய உறவைப் பேணுகின்ற புலம் பெயர்ந்த அமைப்புகள், தமிழர் தாயகத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கும், ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் துரோகமிழைப்பதாகத் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழர்களின் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு துரோகமிழைக்கும் துரோகிகளை தமிழர்கள் இனம் கண்டு நிராகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.