ஒட்டிசுட்டானில் கோரவிபத்து முன்னாள் போராளி மரணம்

238 0
  ஓடிசுட்டன்  சந்தியில்  பிரதான  வீதிக்கு  ஏற முற்ப்பட்ட  மோட்டார் வாகனமும்  பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும்   விபத்துக்குள்ளானதில்   மோட்டர்  சைக்கிளில் பயணித்த முன்னாள்  போராளியும்  வன்னி விழிப்புலன்  அற்றோர் சங்கத்தின் முன்னாள்  பொருளாளருமான குமாரசாமி  நந்தகோபால்(நந்தன்) என்பவரும்  அவருடைய மகனும்  காயமடைந்த  நிலையில்  முல்லைத்தீவு மாஞ்சோலை    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு    மேலதிக சிகிச்சிக்காக குமாரசாமி  நந்தகோபால்  அனுராதபுரம்  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட  நிலையில்  இன்று இறந்துள்ளார்.
விபத்துத்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை  மாங்குளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.