காணாமல் போனோரது உறவினர்களால் தொடர்ந்து போராட்டங்கள்

222 0

காணாமல் போனோரது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக இந்த போராட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கூடாரம் அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்திலும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் திருகோணமலையிலும் காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.