கிண்ணியாவில் இன்று அதிகாலை இருவர் உயிரிழப்பு

286 0

கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினால் இன்று அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கிண்ணியா மாஞ்சோலைச்சேனை பகுதியைச் 33வயதான ஒருவர் எனவும் மற்றும் கிண்ணியா மக்கள் வங்கி வீதியைச் சேர்ந்த 6வயதான சிறுமி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிண்ணியா பிரதேசத்தில் இதுவரையில் ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிண்ணியா சுகாதார சேவைகள் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.