கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

250 0

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 20 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்து போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இரவு பகலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் போன உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்கள் வயோதிப நிலையிலும், நோய் வாய்ப்பட்ட நிலையிலும் மாத்திரைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.