கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு – மு.க. ஸ்டாலின்

251 0

கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டு தமிழக மீனவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில், இலங்கை அரசை கண்டிக்க இந்திய மத்திய அரசு, வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இலங்கை அரசாங்கமும், கடற்படையும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.