காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…. (காணொளி)

251 0

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுத்துள்ள போராட்டம் தீர்வுகளின்றி இன்று பதினைந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த காலங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும் வலியுறுத்தி, காணாமல் போனோரின் உறவினர்கள் தமது போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.

இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.