பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு….(காணொளி)

374 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு கிளையினால் உணவல்லாத பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

விமானப்படையினர் வசம் இருந்த தமது காணிகளை விடவிக்கக்கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் கடந்த ஒரு மாத காலமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் கடந்த முதலாம் திகதி பிலக்குடியிருப்பு பகுதி மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டநிலையில் அங்கு மீள்குடியேறிய மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு கிளையினால் உணவல்லாத பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்க கோரி தை மாதம் 31ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலமாக போராட்டம் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.