யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர், பாதுகாவலர்களால் கல்லூரிக்கு முன்பாக போராட்டம் (காணொளி)
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர், பாதுகாவலர்களால் போராட்டம் ஒன்று கல்லூரிக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சால் கொக்குவில் இந்து கல்லூரிக்கு புதிய அதிபராக பஞ்சாச்சரம் கணேசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் கடந்த சில நாட்களாக கடமையாற்றிய நிலையில் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் அவருக்கு இடமாற்றம் வழங்குவதாக வடக்கு மாகாண கல்விக்குழு கூட்டத்தில் பஞ்சாச்சரம் கணேசனுக்கு இடமாற்றம் வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததை அடுத்து அவருக்கான கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடக்கு மாகாண கல்விக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பஞ்சாச்சரம் கணேசன் தொடர்ந்தும் கொக்குவில் இந்து கல்லூரியின் அதிபராக கடமையாற்ற வேண்டும் என்ற வலியுறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர், பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.