யாழில் தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டார்

246 0
யாழ். இந்து மகளிர் கல்லூரி வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் நேற்றைய தினம் புகையிரத்த்தினில் வீழ்ந்து தற்கொலை புரிய முயன்றவரைக் காப்பாற்றி யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பினில் மேலும் தெரியவருவது ,யாழ். இந்து மகளிர் கல்லூரி வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் நேற்றுக் காலை 10 மணியளவில் புகையிரதத்தினில் வீழ்ந்து தற்கொலை புரியும் நோக்கினில் ஓர் 72 வயது முதியவர் தன்டவாளத்தினில் படுத்துள்ளார். இவ்வாறு தற்கொலை புரியும் நோக்கில் முதியவர் முயற்சிப்பதனை பாதுகாப்புக் கடவைக் காவலாளி அவதானித்துள்ளார். உடனே ஓடிச் சென்று வீதியால் பயணித்தவர்களின் உதவியுடன்  தற்கொலைக்கு  முயன்ற முதியவரைக் காப்பாற்றி காப்பாற்றியுள்ளார்.
இதேநேரம் குறித்த முதியவர் இதற்கு முன்னரும் இதே போன்று இருதடவைகள் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதனாலும் நேற்றைய தினம் தற்கொலைக்கு முயன்ற சமயமும் முதியவரின் உடலில் சில காயங்கள் காணப்பட்டமையினாலும் அது தொடர்பினில் யாழ்ப்பாணம் பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் குறித்த முதியவரை ஏற்றிச் சென்றதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.