சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ்

394 0

லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள் நடனங்கள் சிறப்புரைகள் என இடம்பெற்றதோடு நள்ளிரவு வழிபாட்டுடன் நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளோடு ஒன்றித்திருந்தனர். இதுபோன்ற இறையியல் நிகழ்வுகள் ஊடாகவும் எமது கலை பண்பாட்டு விழுமியங்களை எமது அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவதற்கானதொரு களமாக இருக்கின்றமை சுட்டுதற்குரியதாகும்.