20 வருடங்களின் பின்னர் நேபாளத்தில் தேர்தல்

313 0

20 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நேபாளம் தயாராகியுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி குறித்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக நேபாள அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலே இந்த தேர்தல் இடம்பெறவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பொது தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.