பகிடிவதை புரிந்தவர்களுக்கு வகுப்பு தடை

451 0

பகிடிவதை புரிந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

உபவேந்தரின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரையில் இந்த வகுப்பு தடை அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய 15 மாணவர்களும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.