இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதிநிதிகள் எதிர்வரும் வாரமளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கம் தமது இயலாமையை மறைத்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.