கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது

350 0

கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

இந்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தநிலையில், காணாமல் போனோரது உறவினர்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்ட அலுவலகத்தில் இன்று மனுவொன்றை கையளித்துள்ளனர்.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியே அந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

காணமல் போனோர் தொடர்பான உண்மை நிலவரங்கள் கண்டறியப்படும் வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.