படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

258 0

களுத்துறை – கட்டுக்குருந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று நாடாளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

கட்டுக்குருந்த படகு விபத்தால் பலியானவர்களது குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் வழங்க அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த படகு விபத்தால் 12 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் தொடர்ந்தும் 25 பேர் களுத்துறை – நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் போன இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.