மாபலே தனியார் மருத்துவ கல்லூரி – நாட்டுக்கு நன்மையான தீர்மானம் – ஜனாதிபதி உறுதி

246 0

மாபலே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென் மாகாணத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை முன்னெடுத்த நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பு நாளை காலை 8 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை நான்கு மணிநேரம் இந்தப் பணிப் புறக்கணிப்பை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த பணிப் புறக்கணிப்பை நாளை காலை வரை நீடிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தென் மாகாண இணைப்பாளர் நாத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.