கட்டுகுருந்த படகு விபத்து – பலி எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

239 0

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்கைபெற்றுவந்த ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதன்காரணமாக குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தப் படகு விபத்தில் மேலும் நான்கு பேர் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர், காவலதுறையினர், பொது மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் இன்று ஈடுபட்டுள்ளனர்.