புகையிலை தூள் அடைக்கப்பட்ட பக்கட்களுடன் ஒருவர் கைது(காணொளி)

347 0

கண்டியிலிருந்து பொகவந்தலாவயிற்கு, பேரூந்தில் கொண்டு வரப்பட்ட 16 கிலோ புகையிலை தூள் அடைக்கப்பட்ட பக்கட்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்ட புகையிலைத்தூள் அடைக்கப்பட்ட பக்கட்களில் ஒரு பக்கட்டில் 400 கிராம் வீதம் 40 பக்கட்கள் இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.