களுத்துறை-கட்டுகுருந்த படகு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின்… (காணொளி)

404 0

களுத்துறை-கட்டுகுருந்த படகு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பிரேரணை ஒன்று அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் மூலம் உயிரிழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்கும் மாத்திரமே இடர் முகாமைத்துவ நிலையத்தால் இழப்பீடுகளை வழங்கமுடியும் என்று இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜீ.எல்.எஸ். சேனாதீர தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்கள் மூலம் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நிலைமையை ஆராய்ந்து, அமைச்சரால் பிரேரணையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கட்டுகுருந்த கடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற படகு விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.