மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு…… (காணொளி)

311 0

பயணிகளை ஏற்றிச்செல்லும் மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் ஆலோசனைகளை புறக்கணித்து பயணிகளை ஏற்றிச்செல்லும் மீன்பிடி படகுகளுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

கட்டுக்குருந்த கடலில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகு எந்த வகையிலும் பயணிகள் போக்குவரத்திற்கு பொருத்தமானதல்ல எனவும், இதில் ஐந்து பேர் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்றபோது, 30 பேர் பயணித்ததாகவும், படகில் இருந்த எந்தவொரு பயணியும் பாதுகாப்பு அங்கி அணிந்திருக்கவில்லை எனவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விபத்திற்குள்ளான படகின் கடற்றொழில் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு கடற்றொழில்பணிப்பாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், விபத்து குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.