ஆனையிறவு தட்டுவன்கொட்டி  கண்ணகையம்மன் வித்தியாலயத்தின்…..    (காணொளி)

306 0

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவன்கொட்டி  கண்ணகையம்மன் வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று நடைபெற்றன.

பாடசாலை மைதானத்தில் அதிபர் க.கருணாநந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த விளையாட்டுப் போட்டியில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், கௌரவ விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், சிறப்பு விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ்வினோத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மாணவர்கள் தமது கல்வி பராயத்தை கற்றல் நடவடிக்கையிலும், விளையாட்டு மற்றும் துணைப்பாடங்களில் விருத்தியுள்ள ஒரு சமூகமாக மாற்றமடைவதிலும் செலவிடவேண்டும் என்றும், பெற்றோர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் கல்விமான்களாக மாற்ற எத்தனையோ விடயங்களை தங்களது வாழ்வில் தியாகம் செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் ஓர் சிறந்த வாழ்வாக மாற முனைப்பாக செயற்படவேண்டும் என்றும், வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.