கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாவது நாளாகவும் தொடர்….  (காணொளி)

321 0

இதேவேளை, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள், இலங்கை அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை உடனடியாக வெளியிடு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை ஏற்றுக்கொள், அரசியல் கைதிகளை விடுதலை செய்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கு, ஜநாவே மேலும் கால அவகாசம் வழங்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியுள்ளனர்.