எஸ்.சிவமோகன்  உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்…(காணொளி)

299 0

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன்  இன்று உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பத்தொன்பதாவது நாளை எட்டியுள்ள அதேவேளை சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று எட்டாவது நாளாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், குறித்த மக்களின் போராட்டத்திற்கு இதுவரை எதுவித தீர்வுகளும் கிடைக்காத நிலையில்,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் இன்று பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

போராட்டத்தில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கருத்துத் தெரிவிக்கையில், பலதடவைகள் பாராளுமன்றில் கதைத்தும் காணிப்பிரச்சினை தொடர்பாக எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், எனவே பாராளுமன்றிற்கு சென்று எந்த பலனுமில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.