கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்களின் நிலவிடுவிப்பு போராட்டம் இன்று 21ஆவது நாளாகவும் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டமும் தொடர்கின்றது. இந்த மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். நல்லாட்சி அரசானது இன்னும் இந்த மக்களுக்கான தீர்வுகளை வழங்கவில்லை.
எனவே அன்பான எமது உறவுகளே! முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 2017-02-22ஆம் திகதி புதன்கிழமை பகல் 9.30 மணியளவில் ஒன்றுகூடி பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தமக்களின் நிலவிடுவிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு குரலெழுப்புவோம். வாருங்கள்.
துரைராசா ரவிகரன்
வடமாகாணசபை உறுப்பினர்.