இராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் மாணவர்கள்   ஆர்ப்பாட்டத்தில்….. (காணொளி)

279 0

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின்தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்கள்  நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் பத்து மணி வரை கிளிநொச்சி கோணாவில் பிரதான வீதியில் நின்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

வட மாகாண கல்வி அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில பாடசாலைகள் கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கேப்பாபிலவில் பல மாணவர்கள் இருபது நாட்களாக பாடசாலைக்கு செல்லாது வீதியில் நிற்பதாகவும் இதனால் அந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும் எனவும் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் இராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும், எமது பாடசாலை உமக்கு படை முகாமா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.