மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி(காணொளி)

511 0

 

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி, நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நேற்று பாடசாலை மைதானத்தில் அதிபர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த விளையாட்டு போட்டி நிகழ்வில் விருந்தினர்களாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் என்.பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகள் மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

போட்டியின் இறுதி நிகழ்வாக, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டன.